செய்திகள்

‘கியாஸ் பங்க்’க்கு எதிர்ப்பு- வாயில் கருப்பு துணிகட்டி பெண்கள் போராட்டம்

Published On 2018-09-20 10:25 GMT   |   Update On 2018-09-20 10:25 GMT
ராயபுரம் அருகே கியாஸ் பங்க்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணிகட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராயபுரம்:

காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் தனியார் சார்பில் ஆட்டோ கியாஸ் பங்க் அமைக்கப்படுகிறது.

இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த பங்க் அகற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் அந்த பங்க் நேற்று திறக்கப்பட்டது.

பங்க் அமைப்பதற்கு எதிராக ஏற்கனவே பல போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

இன்று 2-வது நாளாக மீண்டும் போராட்டம் நடந்தது. இதில் ஒய்.எம்.சி.ஏ. குப்பம், சி.ஜி.காலனி, விநாயகர்புரம், அமராஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு அனுமதி அளித்த மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கியாஸ் பங்க்குக்கு எதிராகவும் கோ‌ஷமிட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News