செய்திகள்

கோபி அருகே பள்ளி சென்ற பிளஸ்-1 மாணவி மாயம்

Published On 2018-09-19 12:05 GMT   |   Update On 2018-09-19 12:05 GMT
கோபி அருகே பள்ளி சென்ற பிளஸ்-1 மாணவி மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

கோபி:

கோபி அருகே உள்ள சலங்கபாளையத்தை சேர்ந்தவர் மினிசாமி. கூலி தொழிலாளி. இவரது மகள் ஆனந்தி (வயது 15). கவுந்தப்பாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் பிள்ஸ்-1 படித்து வந்தார்.

கடந்த 15-ந் தேதி மாணவி ஆனந்தி பள்ளிக்கு சென்றார். ஆனால் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து தந்தை மினிசாமி கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரில் ‘‘என் மகளை எனது உறவினரான மாதேஸ்வரன் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார். அவரிடம் இருந்து என் மகளை மீட்டு தாருங்கள்’’ என்று கூறியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் சின்ன தங்கம் இது பற்றி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி ஆனந்தியை தேடி வருகிறார்.

Tags:    

Similar News