செய்திகள்

வில்லுக்குறியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர்- உள்பட 40 பேர் மீது வழக்கு

Published On 2018-09-15 16:19 GMT   |   Update On 2018-09-15 16:19 GMT
வில்லுக்குறியில் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பதவி விலக கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இரணியல்:

இரணியலை அடுத்த வில்லுக்குறி சந்திப்பில் நேற்று குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வங்கி கடன் மோசடியில் சிக்கி உள்ள தொழில் அதிபர் விஜய்மல்லையா வெளிநாடு தப்பிச் செல்ல உதவிய மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பதவி விலக கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கிறைஸ்ட் ஜெனித் முன்னிலை வகித்தார். 

விஜய், அருள்ராஜ், ஆஸ்கர் பிரடி, வின்ஸ் எல்ஜின், ஜெரால்டு கென்னடி, ஆல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்க வில்லை. அனுமதியின்றி போராட்டம் நடை பெற்றதால் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் உள்பட 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Tags:    

Similar News