செய்திகள்
திறந்தவெளியில் மலம் கழித்தால் அபராதம்- தொண்டி பேரூராட்சி எச்சரிக்கை
திறந்த வெளியில் மலம் கழித்தால் அபராதம் விதிக்கப்படும் என தொண்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி கடற்கரை பகுதியாகவும், வளர்ந்துவரும் நகரமாகவும் மாறி வருகிறது. இருப்பினும் இப்பகுதி மக்களிடையே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு குறைவாக காணப்படுகிறது.
திறந்த வெளியில் மலம் கழிப்பதனால் வரும் கேடு பற்றி அறிவிப்பு பலகைகள் மூலம் நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்திவருகிறது.
அதன்படி திறந்தவெளியில் மலம் கழித்தால் ரூ.50 முதல் ரூ.100 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
மேலும் தொண்டி பேரூராட்சி பகுதியினை திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத நகரமாக மாற்ற தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தின் கழிப்பறை கட்ட ஊக்குவிக்கப்பட்டு கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு ரூ.8000 மானியம் வழங்கி கழிப்பறை கட்ட அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து குடியிருப்புகளுக்கும் கழிப்பறை கட்டி பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தவிர கிராமப்புற பகுதிகளில் 5 சமுதாய பொது கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பொது மக்களின் கோரிக்கையின் படிகுளிக்கும் ஊரணியான அன்னி உத்து ஊரணி அருகிலும், வட்டாணம் ரோடு அருகிலும் பொது கழிப்பறை திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டு அனுமதியை எதிர்பார்த்துள்ளோம் என்று செயல் அலுவலர் மாலதி தெரிவித்தார்.
அதேபோல் ஆர்.எஸ். மங்கலம் என்று அழைக்கப்படும் ராஜ சிங்கமங்கலம் பேரூராட்சியிலும் திறந்த வெளியில் மலம் கழித்தால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். #tamilnews
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி கடற்கரை பகுதியாகவும், வளர்ந்துவரும் நகரமாகவும் மாறி வருகிறது. இருப்பினும் இப்பகுதி மக்களிடையே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு குறைவாக காணப்படுகிறது.
திறந்த வெளியில் மலம் கழிப்பதனால் வரும் கேடு பற்றி அறிவிப்பு பலகைகள் மூலம் நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்திவருகிறது.
அதன்படி திறந்தவெளியில் மலம் கழித்தால் ரூ.50 முதல் ரூ.100 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
மேலும் தொண்டி பேரூராட்சி பகுதியினை திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத நகரமாக மாற்ற தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தின் கழிப்பறை கட்ட ஊக்குவிக்கப்பட்டு கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு ரூ.8000 மானியம் வழங்கி கழிப்பறை கட்ட அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து குடியிருப்புகளுக்கும் கழிப்பறை கட்டி பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தவிர கிராமப்புற பகுதிகளில் 5 சமுதாய பொது கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பொது மக்களின் கோரிக்கையின் படிகுளிக்கும் ஊரணியான அன்னி உத்து ஊரணி அருகிலும், வட்டாணம் ரோடு அருகிலும் பொது கழிப்பறை திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டு அனுமதியை எதிர்பார்த்துள்ளோம் என்று செயல் அலுவலர் மாலதி தெரிவித்தார்.
அதேபோல் ஆர்.எஸ். மங்கலம் என்று அழைக்கப்படும் ராஜ சிங்கமங்கலம் பேரூராட்சியிலும் திறந்த வெளியில் மலம் கழித்தால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். #tamilnews