செய்திகள்

பூமியான்பேட்டையில் ஏலச்சீட்டு தகராறில் பெண் மீது தாக்குதல்- தாய், மகன் மீது புகார்

Published On 2018-09-14 11:00 GMT   |   Update On 2018-09-14 11:00 GMT
பூமியான்பேட்டையில் ஏலச்சீட்டு தகராறில் பெண்ணை தாக்கியதாது தொடர்பாக தாய்-மகன் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை தியாகராஜர்வீதியை சேர்ந்தவர் கணபதி ரவி. இவரது மனைவி விமலா (வயது38). இவர் பூமியான்பேட்டையை சேர்ந்த கிரிஜா என்பவரிடம் ஏலச்சீட்டு கட்டி வந்தார். ஏலச்சீட்டு தவணைக்காலம் முடிந்தும் விமலாவுக்கு அதற்கான பணத்தை கிரிஜா கொடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு விமலா ஏலச்சீட்டு பணத்தை கேட்க கிரிஜா வீட்டுக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த கிரிஜா மற்றும் அவரது மகன் சரவணன் ஆகிய இருவரும் சேர்ந்து விமலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து விமலா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Tags:    

Similar News