செய்திகள்

திருப்பத்தூரில் பருப்பு ஆலை அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

Published On 2018-09-12 12:22 GMT   |   Update On 2018-09-12 12:22 GMT
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பருப்பு ஆலை அமைக்கும் முறை பற்றிய தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பருப்பு ஆலை அமைக்கும் முறை பற்றிய தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

வட்டார விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின்கீழ் வேளாண் அறிவியல் நிலையம் குன்றக்குடியில் பருப்பு ஆலை அமைக்கும் முறை குறித்த பயிற்சி நடத்தியது.

வேளாண் அறிவியல் நிலையம் குன்றக்குடி உதவி பேராசிரியர் தேன்மொழி கலந்து கொண்டு பருப்பு ஆலை அமைக்கும் முறை பற்றியும், பருப்பு வகைகளில் மதிப்புக் கூட்டுதல் பற்றிய அனைத்து தொழில் நுட்பங்களையும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரங்கசெல்வி அட்மா திட்டத்தின் மூலம் செயல் படுத்தப்படும் பயிற்சிகள் மற்றும் உழவர் நண்பர்களின் செயல்பாடுகள் பற்றி கூறினார்.

உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சண்முக பாண்டி, வினோதா உழவன் செயலி மற்றும் ஸ்மார்ட் சிவகங்கை செயலி குறித்த செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News