செய்திகள்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவுவிழா - நந்தனம் மைதானத்தில் நடந்த கால்கோள் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பங்கேற்பு

Published On 2018-09-12 10:13 GMT   |   Update On 2018-09-12 10:13 GMT
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவுவிழாவையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற கால்கோள் விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். #MGRcentenaryfunction

சென்னை:

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வந்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் சென்னை மாவட்டத்திலும் நடத்தப்படாமல் இருந்தது.

இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 22-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நடைபெற உள்ளது.

இதைதொடர்ந்து சென்னையில் 30-ந்தேதி நிறைவுவிழா நடைபெற உள்ளது. இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலையில் கால்கோள் விழா நடைபெற்றது.

இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பூமி பூஜை நடத்தப்பட்டு முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

கண்காட்சி அரங்கம், மேடை அமைக்கும் பணிகள் பிரமாண்டமாக செய்யப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

30-ந்தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேசிய தலைவர்களும் பலர் சிறப்ப்புரையாற்ற உள்ளனர். #MGRcentenaryfunction

Tags:    

Similar News