செய்திகள்

கோவையில் கடனை திருப்பி செலுத்த முடியாததால் டாக்சி டிரைவர் தற்கொலை

Published On 2018-09-10 11:59 GMT   |   Update On 2018-09-10 11:59 GMT
கோவையில் கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் டாக்சி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கக்கன் காலனியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 42). டாக்சி டிரைவர். இவரது மனைவி பிந்து. இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி புதிதாக ஆம்னி வேன் வாங்கினார். ஆனால் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக அஜித்குமார் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஜித்குமாரின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News