செய்திகள்

ராசிபுரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து கிளீனர் பலி- மாணவ, மாணவிகள் 3 பேர் படுகாயம்

Published On 2018-09-10 11:13 GMT   |   Update On 2018-09-10 11:13 GMT
ராசிபுரம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் டிரைவர் பலியானார். மாணவ, மாணவிகள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ராசிபுரம்:

ராசிபுரம்- சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் ராசி இன்டர்நே‌ஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் இருந்து மாணவ - மாணவிகளை அழைத்து வருவதற்காக வேன் வசதி உள்ளது.

இன்று காலை சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து குழந்தைகளை ஏற்றி வருவதற்காக வேன் சென்றது. அந்த வேனை பெரியசாமி (வயது 42) என்பவர் ஓட்டிச் சென்றார். இதில் கிளீனராக சதீஷ்குமார் (28) என்பவர் இருந்தார்.

இந்த வேன் இன்று காலை 34 பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வெள்ளக் கணவாய் என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது.

உடனே வேனில் இருந்த மாணவ - மாணவிகள் கதறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேனில் இருந்த மாணவ - மாணவிகளை பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்தில் கிளீனர் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மகரிஷி, ஹேமரஞ்சினி, ஹர்சினி ஆகிய 3 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். இவர்களை மீட்டு ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். #tamilnews
Tags:    

Similar News