செய்திகள்
கைது செய்யப்பட்ட முருகன்.

7-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு - மின்கம்பத்தில் கட்டி வைத்து முதியவரை தாக்கிய பொதுமக்கள்

Published On 2018-09-08 05:05 GMT   |   Update On 2018-09-08 05:05 GMT
திண்டுக்கல் அருகே 7-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த முதியவரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர்.
தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே உள்ள எரமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது60). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தோட்டத்தில் 13 வயது மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார்.

அந்த சிறுமி திண்டுக்கல்லில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற அந்த மாணவியிடம் முருகன் நைசாக பேசி மிட்டாய்கள் வாங்கி கொடுத்து பழகி உள்ளார்.

அதன்பிறகு சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று அவரை மிரட்டி அனுப்பி உள்ளார்.

அதன்பின் நேற்று மாலை பள்ளிக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை முருகன் தனியாக அழைத்து சென்றார். அங்கு வேலை செய்தவர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றபோது சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கற்பழிக்க முயன்றது தெரிய வந்தது.

இதனையடுத்து முருகனை அங்குள்ள மின் கம்பத்தில் பொதுமக்கள் கட்டி வைத்தனர். சிறுமியை வீட்டிற்கு அனுப்பி வைத்து அவரது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் முருகனை தாக்கி தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணையில்தான் முருகன் ஏற்கனவே சிறுமியை கற்பழித்த விபரம் தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமியை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags:    

Similar News