செய்திகள்

காட்பாடியில் வீட்டை இடித்ததால் ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

Published On 2018-09-07 12:31 GMT   |   Update On 2018-09-07 12:31 GMT
காட்பாடியில் வீட்டை அதிகாரிகள் இடித்ததை கண்டித்து ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:

காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜயகுமார் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், பழைய காட்பாடி குளக்கரையில் உள்ள ஒரு ஏரி புறம்போக்கு நிலத்தில் விஜயகுமார் புதிய வீடு கட்டினார். தகவலறிந்து அங்குசென்ற அதிகாரிகள் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறி இடித்து தள்ளினர்.

இதனால், மனமுடைந்த விஜயகுமார் தனது மனைவி, குழந்தைகளுடன் திருவலம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும் மண்எண்ணையை ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.

காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மண்எண்ணை கேனை கைப்பற்றினர். பிறகு ஆட்டோ டிரைவர் விஜய குமாரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News