செய்திகள்

கொலை வழக்கில் ஜாமினில் வந்த வாலிபர் தற்கொலை

Published On 2018-09-06 10:45 GMT   |   Update On 2018-09-06 10:45 GMT
வேலூரில் கொலை வழக்கில் ஜாமினில் வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்:

வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டீஸ்வரன் என்பவர் கொலை செய்யபட்டார். இந்த வழக்கில் ஓல்டுடவுனை சேர்ந்த சாய்சரத் (24) என்பவர் உள்பட 4 பேர் கைது செய்யபட்டனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட சாய்சரத் ஜாமினில் வெளியே வந்தார். அவர் சரியாக வேலைக்கு போகாமல் வீட்டில் பணம் கேட்டுள்ளார்.

இதனால் வீட்டில் தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த சாய்சரத் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் தெற்கு போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News