செய்திகள்

எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை - சிபிஐ ரெய்டு குறித்து விஜய பாஸ்கர் கருத்து

Published On 2018-09-05 14:47 GMT   |   Update On 2018-09-05 14:47 GMT
குட்கா விவகாரத்தில் சிபிஐ ரெய்டு நடத்திய நிலையில், ‘தற்போதும் சொல்கிறேன் எனக்கு மடியில் கனமில்லை எனவே வழியில் பயமில்லை’ என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். #GutkhaScam #VijayaBhaskar #CBIRaid
சென்னை:

குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சிபிஐ ரெய்டு தொடர்பாக அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளதாவது:-

குட்கா, பான்மசாலா தொடர்பாக நான் யாரையும் சந்தித்தது இல்லை. இன்று நடந்த சிபிஐ சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். எந்த விசாரணைக்கும் தயாராகவே உள்ளேன். குற்றச்சாட்டுகளை பரப்பி அரசியலில் இருந்து அகற்றிவிடலாம் என மனப்பால் குடிக்கின்றனர். 

அரசியல் எதிரிகளால் உருவாக்கப்படும் சூழ்ச்சிகளை தகர்த்து வெற்றி பெறுவேன். குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார். தற்போதும் சொல்கிறேன் எனக்கு மடியில் கனமில்லை எனவே வழியில் பயமில்லை. இந்த பிரச்சனையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வேன். 

என விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News