செய்திகள்

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-05 12:14 GMT   |   Update On 2018-09-05 12:14 GMT
கரூர் மாவட்ட பா.ம.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்:

கரூர் மாவட்ட பா.ம.க. சார்பில் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே. பாஸ்கரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் ராக்கி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி, அமராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியபோதும் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லாததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பட்டி ஏரி, தாதம்பாளையம் ஏரி உள்ளிட்ட பெரிய ஏரிகளில் காவிரி-அமராவதி ஆற்று உபரிநீரை குழாய் மூலம் கொண்டு சென்று அதில் சேகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 

இதில் மாநில துணை தலைவர் குணசேகரன், நகர செயலாளர் சங்கர், மாவட்ட துணை செயலாளர் வரதராஜன், மாநில உழவர் பேரியக்க துணை தலைவர் ஞானசேகரன், தாந்தோன்றி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி உள்பட பா.ம.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News