செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-09-04 17:54 GMT   |   Update On 2018-09-04 17:54 GMT
பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்:

வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் அருகே உள்ள சத்தியமங்கலம் புதிய காலனியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் அருண்பிரசாத் (வயது 16). அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 10 நாட்களாக அருண்பிரசாத் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதில் மனமுடைந்த அருண்பிரசாத் நேற்று காலை அனைவரும் வெளியில் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்தவர்கள் வீடு திரும்பியபோது அருண்பிரசாத் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். உடனடியாக இதுபற்றி விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து சென்று மாணவர் அருண்பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News