செய்திகள்

பரமத்திவேலூர் அருகே நார் மில்லில் தீ விபத்து

Published On 2018-09-01 13:38 GMT   |   Update On 2018-09-01 13:38 GMT
பரமத்திவேலூர் அருகே நார்மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நார்கள் எரிந்து நாசமானது.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 50). இவர் நார் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நார்மில்லில் உள்ள நார்கள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரமித்தது. இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் தனசேகரன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து அருகில் உள்ள வீடுகளுக்கும், தோட்டங்களுக்கும் பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நார்கள் எரிந்து நாசமானது.
Tags:    

Similar News