செய்திகள்
காட்டுமன்னார்கோவில் அருகே மணல் கடத்தி சென்ற லாரி டிரைவர் கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மணல் கடத்தி சென்ற லாரியை போலீசார் விரட்டி சென்று மடக்கினர். மேலும் டிரைவரை கைது செய்தனர்.
முஷ்ணம்:
நாகப்பட்டினம் மாவட்டம் மணல்பேடு பகுதி கொள்ளிடம் ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக லாரியில் மணல் எடுத்துக் கொண்டு செல்வதாக காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் காட்டுமன்னார்கோவில் அருகே மோவூர் பகுதி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்த முயற்சித்தபோது டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிசென்றார்.
உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று லாரியை மடக்கினர். அந்த லாரியில் நாகப்பட்டினம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. உடனே லாரியை ஓட்டிவந்த குமராட்சி ஒன்றியம் இளங்காப்பூர் பகுதியை சேர்ந்த டிரைவர் கருணாகரனை கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்தனர். போலீசார் விரட்டி சென்று லாரியை மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகப்பட்டினம் மாவட்டம் மணல்பேடு பகுதி கொள்ளிடம் ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக லாரியில் மணல் எடுத்துக் கொண்டு செல்வதாக காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் காட்டுமன்னார்கோவில் அருகே மோவூர் பகுதி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்த முயற்சித்தபோது டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிசென்றார்.
உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று லாரியை மடக்கினர். அந்த லாரியில் நாகப்பட்டினம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. உடனே லாரியை ஓட்டிவந்த குமராட்சி ஒன்றியம் இளங்காப்பூர் பகுதியை சேர்ந்த டிரைவர் கருணாகரனை கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்தனர். போலீசார் விரட்டி சென்று லாரியை மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.