செய்திகள்
மீஞ்சூர் அருகே தனியார் பள்ளியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- வேன் டிரைவர் கைது
மீஞ்சூர் அருகே தனியார் பள்ளியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த மேலூரை சேர்ந்த 4 வயது சிறுமி புங்கம்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். தினமும் பள்ளி வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த வேனில் டிரைவராக பால்பாண்டி என்பவர் இருந்தார்.
இந்த நிலையில் பள்ளி சென்று திரும்பிய சிறுமியின் உடையை பெற்றோர் மாற்றினர். அப்போது சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. இது பற்றி சிறுமியிடம் பெற்றோர் கேட்ட போது வேன் டிரைவர் பால் பாண்டி பள்ளியில் உள்ள கழிவறையில் வைத்து தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி மீஞ்சூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.
சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மீஞ்சூரை அடுத்த மேலூரை சேர்ந்த 4 வயது சிறுமி புங்கம்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். தினமும் பள்ளி வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த வேனில் டிரைவராக பால்பாண்டி என்பவர் இருந்தார்.
இந்த நிலையில் பள்ளி சென்று திரும்பிய சிறுமியின் உடையை பெற்றோர் மாற்றினர். அப்போது சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. இது பற்றி சிறுமியிடம் பெற்றோர் கேட்ட போது வேன் டிரைவர் பால் பாண்டி பள்ளியில் உள்ள கழிவறையில் வைத்து தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி மீஞ்சூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.
சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.