செய்திகள்

மு.க.அழகிரியின் மகள் வீட்டில் அத்துமீறி நுழைந்த 2 பேர் கைது

Published On 2018-08-29 04:22 GMT   |   Update On 2018-08-29 04:22 GMT
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.அழகிரியின் மகள் வீட்டில் அத்துமீறி நுழைந்த 2 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகள் கயல்விழி வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு நள்ளிரவு 2 பேர் அத்துமீறி நுழைய முயன்றனர். இதை கண்டதும் அங்கிருந்த காவலாளி அவர்களை தடுத்தார். இருப்பினும் அவர்கள் 2 பேரும் வீட்டிற்குள் நுழைந்தனர். இதுகுறித்து உடனடியாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், காஞ்சீபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 37), போரூரை சேர்ந்த சங்கர் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றும் 2 பேரும் எதற்காக மு.க.அழகிரியின் மகள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News