செய்திகள்

கிருஷ்ணகிரியில் தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு

Published On 2018-08-27 16:10 GMT   |   Update On 2018-08-27 16:10 GMT
கிருஷ்ணகிரியில் தோட்டத்தில் புகுந்த 11 அடி மலைப்பாம்பை வனத்துறையில் பிடித்து வன பகுதியில் கொண்டு விட்டனர்.
வேப்பனஅள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, பட்டா குருபரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா (வயது50). இவரது தோட்டத்தில் திடீரென சத்தம் கேட்டது. அப்போது அந்த பகுதியில் அவர் சென்று பார்த்த போது 11 அடி நீள மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து வனத்துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் குச்சியை வைத்து அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் செப்டிபள்ளி வன பகுதியில் கொண்டு விட்டனர்.

Tags:    

Similar News