செய்திகள்

முக்கொம்பு மேலணையில் 8 மதகுகளை வெள்ளம் அடித்து சென்றது - மக்களுக்கு எச்சரிக்கை

Published On 2018-08-22 15:43 GMT   |   Update On 2018-08-22 17:25 GMT
திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஓடும் அதிக தண்ணீரால் மேலணையில் உள்ள 8 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Cauvery #Mukkombu
திருச்சி:

கர்நாடகா மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கிருந்து உபரிநீர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மேலணையில் உள்ள 45 மதகுகளில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால், ஆற்றில் சுமார் 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. மதகு உடைப்பை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அணைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் வந்து அணையை பார்வையிட்டார். 
Tags:    

Similar News