செய்திகள்

திருக்கோவிலூர் அருகே மணல் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்

Published On 2018-08-22 10:23 GMT   |   Update On 2018-08-22 10:23 GMT
திருக்கோவிலூர் அருகே மணல் கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் 2 டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள அருங்குரிக்கை கிராமத்தில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலையொட்டி திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் அங்கு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக டிராக்டரை ஓட்டி வந்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அரிகோவிந்தன் (வயது 25) என்பரை கைது செய்தனர். அடுத்து மொகலார் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே ஊரைச் சேர்ந்த ராஜமாணிக்கம், அன்பழகன், மணிகண்டன் மற்றும் மேமாளூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகிய 4 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் பாடியந்தல் கிராமத்தில் மணல் கடத்தியதாக ஒரு டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

Tags:    

Similar News