செய்திகள்

8 வழிச்சாலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்- அமைச்சர் கே.சி. கருப்பணன்

Published On 2018-08-22 06:45 GMT   |   Update On 2018-08-22 06:45 GMT
சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறியுள்ளார்.
பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் பார்வையிட்டார்.

பிறகு அந்த பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 375 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் கே.சி. கருப்பணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது நிருபர்கள் அமைச்சரிடம் சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதே? என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறியதாவது:- பொதுப்பணித்துறை நமது முதல் அமைச்சரிடம் உள்ளது. எனவே முதல்வர் தகுந்த முடிவை எடுப்பார். ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம். உரிய தீர்வு வரும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறினார்.
Tags:    

Similar News