செய்திகள்

மதுரையில் அரசு பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை அபேஸ்

Published On 2018-08-21 15:41 IST   |   Update On 2018-08-21 15:41:00 IST
மதுரையில் அரசு பஸ்சில் 12 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை:

சென்னை கிழக்கு முகப்பேர் நக்கீரன் சாலையை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது60). இவரது மனைவி கவுசல்யா. சில நாட்களுக்கு முன்பு மதுரை திருநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருவரும் வந்திருந்தனர்.

சம்பவத்தன்று இரவு சென்னை செல்வதற்காக கணவன்-மனைவி திருமங்கலத்தில் இருந்து எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் செல்லும் பஸ்சில் ஏறினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் இருவரும் நின்று கொண்டே பயணித்தனர்.

இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் கவுசல்யா வைத்திருந்த கைப்பையை நைசாக திருடிக் கொண்டு தப்பினர். அதில் 12 பவுன் நகை இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரியார் பஸ் நிலையத்தில் இறங்கிய கவுசல்யா நகை இருந்த கைப்பை திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

மதுரை பெத்தானியாபுரம் பாஸ்டின் நகரைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (54). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினான்.

இதுகுறித்து கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News