செய்திகள்
கிருஷ்ணகிரியில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை - அரசு பஸ் கண்டக்டர் கைது
கிருஷ்ணகிரியில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் கண்டக்டர் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கோயமுத்தூர் அடுத்த கோவைபுதூர் அலமு நகரை சேர்ந்த முருகன் மகள் ராணி (23). (இருவரது பெயரும் மாற்றபட்டுள்ளது) இவர், கடந்த 19ம் தேதி இரவு கோயமுத்தூரில் இருந்து பெங்களூருக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் சென்று கொண்டிருந்துள்ளார். பஸ் சேலம் கருமத்தம்பட்டி அருகே வந்த போது, அந்த பஸ்சின் கண்டக்டரான கூடலூர் அடுத்த கொத்தாட்டை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(42) என்பவர், ஸ்ரீஜாவிற்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரி வரும் வரை இதே போல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீஜா கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இறங்கி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி வழக்கு பதிவு செய்து, பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் கண்டக்டரான வேல்முருகனை கைது செய்தார்.
கோயமுத்தூர் அடுத்த கோவைபுதூர் அலமு நகரை சேர்ந்த முருகன் மகள் ராணி (23). (இருவரது பெயரும் மாற்றபட்டுள்ளது) இவர், கடந்த 19ம் தேதி இரவு கோயமுத்தூரில் இருந்து பெங்களூருக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் சென்று கொண்டிருந்துள்ளார். பஸ் சேலம் கருமத்தம்பட்டி அருகே வந்த போது, அந்த பஸ்சின் கண்டக்டரான கூடலூர் அடுத்த கொத்தாட்டை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(42) என்பவர், ஸ்ரீஜாவிற்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரி வரும் வரை இதே போல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீஜா கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இறங்கி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி வழக்கு பதிவு செய்து, பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் கண்டக்டரான வேல்முருகனை கைது செய்தார்.