செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிலாளி கொலையில் 6 பேர் கைது

Published On 2018-08-21 06:57 GMT   |   Update On 2018-08-21 06:57 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்புரவு தொழிலாளி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியை சேர்ந்த தேவசுந்தரமூர்த்தி (31). இவர் ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கடந்த 19-ம் தேதி கீவளூர் குளத்தங்கரை அருகே நின்றிருந்த தேவசுந்தர மூர்த்தியை 13 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்த சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தார்.

விசாரணையில் பெண்ணை கிண்டல் செய்ததில் ஏற்பட்ட தகராறில் கச்சிபட்டு பகுதியை சேர்ந்த 13 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ், சூரியா, மனோஜ், கணேஷ், கோலி, விக்னேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக தலைமறைவான மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News