செய்திகள்

அய்யம்பேட்டை அருகே செங்கல் சூளையை சூழ்ந்த வெள்ளம்

Published On 2018-08-20 16:45 GMT   |   Update On 2018-08-20 16:45 GMT
கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் செங்கல் சூளை ஒன்று மூழ்கி உள்ளது. #kollidamriver

அய்யம்பேட்டை:

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் தஞ்சை மாவட்டம் வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு, கருப்பூர் ஆகிய கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. பட்டுக்குடி கிராமம் வடக்கு தெருவிலும், கூடலூர் கிராமம் வடக்கு தெருவிலும் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. வெள்ள சூழ்ந்த வீடுகளிலிருந்து பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுடன் வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளனர். கால்நடைகளை மேடான பகுதிகளில் கட்டி வைத்துள்ளனர்.

அதுபோல அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு கொள்ளிடத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் நீரேற்று நிலையத்தையும் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் இந்த கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, முருங்கை, சவுக்கு தோட்டங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. மேலும் கூடலூர் காளியம்மன்கோவில் கும்பாபிக்ஷேகம் இந்த மாதம் 23-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த கோவிலையும் வெள்ள நீர் சூழ்ந்தது. கொள்ளிடம் ஆற்றின் வெள்ளத்தில் செங்கல் சூளை ஒன்று மூழ்கி உள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது முதல் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொள்ளிடக்கரைக்கு வந்து வெள்ளநீரை வேடிக்கை பார்த்து செல்கின்றனர். அவர்களை அதிகாரிகள் பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தி வருகின்றனர். பொதுமக்களின் வருகை அதிகமாக இருப்பதால் கொள்ளிட ஆற்றுக்கரை ஒரு சுற்றுலாதலம்போல் காட்சியளிக்கிறது. #kollidamriver

Tags:    

Similar News