செய்திகள்

கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை தாராளமாக வழங்குங்கள் - சிவகங்கை கலெக்டர்

Published On 2018-08-20 10:47 GMT   |   Update On 2018-08-20 10:47 GMT
வெள்ளத்தில் பாதிப்படைந்த கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை தாராளமாக வழங்குங்கள் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை கலெக்டர் லதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கேரள மாநிலத்தில் தொடர் மழையின் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவிடும் வகையில் நிவாரணம் வழங்கலாம்.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கிட ஏதுவாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள கொடையாளர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆகியோரிடம் நிதியுதவி, உணவு தானியப் பொருட்கள், மருத்துவப்பொருட்கள் மற்றும் ஆடைகள் பெறப்படுகின்றன.

கொடுக்கக்கூடிய நபர்கள் தாராளமாக முன்வந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அலுவலகத்தில் வழங்கலாம்.

மேலும் தகவல் தெரிவிக்க கைப்பேசி எண்: 9445008149 மற்றும் 1077 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News