செய்திகள்

வாழப்பாடி அருகே லாரி டிரைவர் தற்கொலை

Published On 2018-08-18 12:33 GMT   |   Update On 2018-08-18 12:33 GMT
வாழப்பாடி அருகே லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது அண்ணன் போலீசில் புகார் செய்தார்.போலீசார் இறுதிச்சடங்கு நேரத்தில் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரம் காலனி பகுதியை சேர்ந்த உலகளந்தான் (வயது 47). இவர் லாரி டிரைவர். இவரது மனைவி இந்துராணி, மகள்கள் சரணியா, சவுந்திகா இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் வாழப்பாடியில் உள்ள அடுக்குமாடி  குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 

இவர் நேற்று முன்தினம் வழக்கமாக வீட்டில் படுத்து தூங்கினார். நேற்று காலை வெகுநேரம் ஆகியும் கதவு திறக்காததால் அவரது மனைவி இந்துராணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்த போது உலகளந்தான் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். 

இதையடுத்து உறவினர்கள் உடலை மீட்டு நேற்று மாலை இறுதிசடங்கு செய்தனர். உலகளந்தான் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது அண்ணன் சீனிவாசன் வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று இறுதிசடங்குக்காக வைக்கப்பட்ட உலகளந்தான் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கா சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர் எதற்காக இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News