செய்திகள்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சென்னை பக்தர் பிணம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இன்று காலை பக்தர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு வந்தார்.
கிரிவலப்பாதையில் ஈசானிய லிங்கம் அருகே உள்ள தற்காலிக பஸ் நிலைய மைதானத்தில் இன்று காலை வெங்கடேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
வாயில் நுரை தள்ளி இருந்தது. திருவண்ணாமலை கிழக்கு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிந்து கிரிவலம் சென்ற சென்னை பக்தர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.