செய்திகள்

ஈரோடு-நாமக்கல் மாவட்டத்தில் காவிரி வெள்ளம்: முதலமைச்சர் பழனிசாமி நாளை பார்வையிடுகிறார்

Published On 2018-08-18 12:51 IST   |   Update On 2018-08-18 12:51:00 IST
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி வெள்ளப்பகுதிகளை நாளை பார்வையிடுகிறார். நாளை காலை அவர் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டத்தை பார்வையிடுகிறார். #TNCM #EdappadiPalaniswami
சென்னை:

காவிரியில் வெள்ளம் 3 லட்சம் கன அடி அளவுக்கு பாய்ந்தோடுகிறது. இதனால் தமிழகத்தில் காவிரி கரையோரப் பகுதியில் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வசித்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி வெள்ளப்பகுதிகளை நாளை பார்வையிடுகிறார். இதற்காக இன்று அவர் சேலம் செல்கிறார்.

நாளை காலை அவர் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டத்தை பார்வையிடுகிறார். பவானியில் தொடங்கி காளிங்கராயன் பாளையம், குமாராபாளையம், பள்ளிபாளையம் ஆகிய இடங்களையும், பின்னர் கரூர் மாவட்டத்தில் வெள்ளப் பகுதிகளையும் பார்வையிடுகிறார்.

நாளை மாலை ஈரோட்டில் வெள்ள நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். #TNCM #EdappadiPalaniswami

Tags:    

Similar News