செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2018-08-18 05:59 GMT   |   Update On 2018-08-18 05:59 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது போந்தூரை சேர்ந்த வேல் முருகன், சீனு,சேட்டு ஆகிய 3 பேர் அங்குள்ள சுடுகாட்டில் வைத்து கஞ்சா விற்பது தெரிந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து1கிலோகஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News