செய்திகள்
நாமக்கல் மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் 16-ந் தேதி நடக்கிறது
நாமக்கல் மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் 16-ந் தேதி நடக்கிறது. இதில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர், கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு திருச்செங்கோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், அவைத்தலைவர் நடன சபாபதி தலைமையில் நடைபெறுகிறது.
இதில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர், கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு திருச்செங்கோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், அவைத்தலைவர் நடன சபாபதி தலைமையில் நடைபெறுகிறது.
இதில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.