செய்திகள்

வேப்பூர் அருகே மரத்தில் பிணமாக தொங்கிய முதியவர்

Published On 2018-08-13 13:46 GMT   |   Update On 2018-08-13 13:46 GMT
வேப்பூர் அருகே மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக தொங்கினார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் மரங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு மரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் மரத்தில் ஒருவர் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் இதுகுறித்து வேப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு மரத்தில் தொங்கியவரின் உடலை மீட்டனர். அவர் யார்? எந்த ஊர் என்ற விவபரம் தெரியவில்லை. 

அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அவரை யாராவது அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தொங்கவிட்டார்களா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News