செய்திகள்

அரக்கோணத்தில் பைக் திருடர்கள் 3 பேர் கைது

Published On 2018-08-13 11:24 GMT   |   Update On 2018-08-13 11:24 GMT
வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் பைக் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் பகுதிகளில் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி. பர்வேஷ்குமார் உத்தரவின் பேரில் அரக்கோணம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையில் அரக்கோணம் உட்கோட்ட பகுதிகளில் இரவு பகல் முழுவதும் ஏராளமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் சரியான முறையில் தங்களுக்கு இட்ட பணிகளை செய்கிறார்களா? என்று டி.எஸ்.பி.யும் அனைத்து பகுதிகளிலும் நேரில் சென்று கண்காணித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அரக்கோணம் தொல்சாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட டவுன் போலீசார் அங்கு நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கோவிந்தவாடி அகரத்தை சேர்ந்த அஜித்குமார்(20), லோகேஷ்(24), மற்றும் பள்ளூர் பகுதியை சேர்ந்த சரத்குமார்(22) என்றும் அவர்கள் பைக் திருடர்கள் என்றும் தெரிந்தது.

அவர்கள் மறைத்து வைத்திருந்த 3 பைக்குகளும் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து டி.எஸ்.பி. குத்தாலிங்கம் கூறியதாவது:-

புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி. அவர்கள் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது தயங்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் இரவு பகல் முழுவதும் அனைவரும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடவேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருந்து தங்கள் கடமையை முழு மனதுடன் செய்ய வேண்டும் என்று கூறிய ஆலோசனைகளின் படி நாங்களும் கால நேரம் பாராமல் கடமையாற்றி வருகிறோம். எங்களுக்கு பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News