செய்திகள்

பெரியகுளம் அருகே மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை

Published On 2018-08-13 10:38 GMT   |   Update On 2018-08-13 10:38 GMT
பெரியகுளம் அருகே மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தேனி:

பெரியகுளம் அருகே வடுகபட்டி கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது47). இவரது மனைவி பெத்தாச்சி. பால்பாண்டியின் சகோதரருக்கும் இவர்களுக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றியதால் பெத்தாச்சி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த பால்பாண்டி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டி நூலகத்தெருவை சேர்ந்தவர் நேசமணி (54). தனது மகன் ஜெயகுருவுடன் இளநீர் வியாபாரம் பார்த்து வந்தார். சம்பவத்தன்று செலவுக்கு மகனிடம் பணம் கேட்டுள்ளார்.

இதற்கு ஜெயகுரு மறுக்கவே மனமுடைந்த நேசமணி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News