செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் கல்லூரி மாணவியிடம் நகை பறிப்பு

Published On 2018-08-12 13:30 GMT   |   Update On 2018-08-12 13:30 GMT
கல்லூரி மாணவியிடம் பைக்கில் வந்து நகை பறித்த வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பரங்குன் றத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி, ரெயில்வே ஊழியர். இவரது மகள் வித்யா (வயது21). பசுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று மாலை இவர் நிலையூர் பிரிவு சாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று வித்யா அணிந்திருந்த 1½ பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

இதேபோல் எஸ்.எஸ்.காலனி துரைச்சாமி நகர் ஷாலினி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (62). கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நேற்று முன்தினம் இவர் குடும்பத்துடன் தூத்துக்குடியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். இன்று காலை வீடு திரும்பிய அவர்கள் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News