செய்திகள்

திருவொற்றியூரில் செல்போன் கொள்ளையன் கைது

Published On 2018-08-07 09:03 GMT   |   Update On 2018-08-07 09:03 GMT
திருவொற்றியூரில் செல்போன் கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrestcase

திருவொற்றியூர்:

திருவொற்றியூர் கடற்கரை சாலையில் கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் பக்கிரிசாமி நின்றார். அவர் தனது செல்போனை லாரியில் சார்ஜரில் போட்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்போனை திருடி தப்பி செல்ல முயன்றனர்.

அவர்களில் ஒருவனை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவன் திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரிந்தது. அவனை திருவொற்றியூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News