செய்திகள்
காரைக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

காரைக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2018-08-06 11:28 GMT   |   Update On 2018-08-06 11:28 GMT
எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு காரைக்குடி காவேரி மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கிளை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
காரைக்குடி:

எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு காரைக்குடி காவேரி மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கிளை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

என்.சி.சி. கமாண்டிங் ஆபீசர் அஜய் ஜோசி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து காவேரி மருத்துவமனை வரை சுமார் 4 கி.மீ. சாலை வழியாக நடந்தது.

வழி நெடுகிலும் சாலை விழிப்புணர்வு குறித்த கோ‌ஷங்களை எழுப்பிக் கொண்டும் கைகளில் விழிப்புணர்வு பலகைகளை ஏந்தியும் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை செயல் இயக்குநர் சலீம், மருத்துவ இயக்குநர்கள் ராதா, காமாட்சி சந்திரன், டாக்டர். சரவணன், இந்திய மருத்துவ கழகத்தின் மாநில செயலாளர் ஸ்ரீதர், காரைக்குடி காவேரி கிளை தலைவர் செய்யது அன்சாரி, செயலாளர் உதயகுமார், பொருளாளர் பிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News