செய்திகள்

சத்தியமங்கலத்தில் சீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

Published On 2018-08-06 10:05 GMT   |   Update On 2018-08-06 10:05 GMT
சத்தியமங்கலத்தில் சீரான குடிநீர் வசதி கோரி 100-க்கும் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அத்தாணி ரோடு பகுதியில் இந்திரா நகர், வீனஸ் நகர், ரோஜா நகர் ஆகிய 3 பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த 3 மாதமாக சீரராக குடிநீர் வரவில்லையாம்.

ஆகவே சீரான குடிநீர் வசதி கோரி அந்த பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண் கள் காலி குடங்களுடன் இன்று காலை 10.30 மணிக்கு சத்தி- அத்தாணி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்றனர்.

அவர்கள் சாலை மறியல் நடத்திய பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Tags:    

Similar News