செய்திகள்
ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. #RationShopEmployeesStrike
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும். ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பொருள்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறுகையில், அரசுடன் கூட்டுறவு சங்க பதிவாளர், கூடுதல் பதிவாளர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். #RationShopEmployeesStrike