செய்திகள்
பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகன மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் மேக்கூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 75). விவசாயி.
இவர் இன்று தனது மொபட்டுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றார். விஜயமங்கலத்தில் உள்ள பெட்ரோல் பங்குக்கு செல்ல அவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பழனிச்சாமி ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பழனிசாமி பரிதாமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான பழனிசாமிக்கு 3 மகள்கள் உள்ளனர்.
பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் மேக்கூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 75). விவசாயி.
இவர் இன்று தனது மொபட்டுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றார். விஜயமங்கலத்தில் உள்ள பெட்ரோல் பங்குக்கு செல்ல அவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பழனிச்சாமி ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பழனிசாமி பரிதாமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான பழனிசாமிக்கு 3 மகள்கள் உள்ளனர்.