செய்திகள்

சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கூடாது- என்.ஆர்.தனபாலன்

Published On 2018-08-02 08:46 GMT   |   Update On 2018-08-02 08:46 GMT
தமிழக கோவில் சிலைகளை கடத்தும் கும்பலை பிடிக்கின்ற குழுவிற்கு தலைவரான ஐ.ஜி.பொன்மாணிக்கவேலிடமிருந்து வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றியிருப்பது துரதிஷ்டமானது என்று என்.ஆ.தனபாலன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கோவில் சிலைகளை கடத்தும் கும்பலை பிடிக்கின்ற குழுவிற்கு தலைவரான ஐ.ஜி.பொன்மாணிக்கவேலிடமிருந்து வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றியிருப்பது துரதிஷ்டமானது.

மக்களின் சந்தேகங்களை போக்குவதற்காகவும், தமிழக அரசு மீதுள்ள களங்கத்தை போக்கிடவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சாமி சிலைகளை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காகவும் மீண்டும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு முழுமையான விசாரணையை தொடர்ந்திட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News