செய்திகள்

வானூர் அருகே விபத்து: பிளஸ்-1 மாணவர் பலி

Published On 2018-08-02 09:44 GMT   |   Update On 2018-08-02 09:44 GMT
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள இடையன் சாவடி களத்துமேடு பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகன் மோகன் (வயது 17). இவர் புதுவை சேதராப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று இரவு மோகன் தனது நண்பர் சதீஷ்குமார் (18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆரோவில்லில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பாடு வாங்க சென்றார். மோட்டார் சைக்கிளை மோகன் ஓட்டி சென்றார். பின்னால் சதீஷ்குமார் இருந்தார்.

ஆரோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலைஓரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சதீஷ் குமார் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன்ஜோசப் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த சதீஷ்குமாரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.
Tags:    

Similar News