செய்திகள்

லஞ்சம் கொடுத்தால் கூடுதல் மார்க் - அண்ணா பல்கலை. முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா சஸ்பெண்ட்

Published On 2018-08-03 07:06 GMT   |   Update On 2018-08-03 07:06 GMT
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கூடுதல் மார்க் வழங்கியது தொடர்பாக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். #AnnaUniversity
சென்னை:

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் கூடுதல் மார்க் பெற லஞ்சம் கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது.

மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மார்க் வழங்கியதாக, அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் தற்போதைய ஐடி துறை பேராசிரியையுமான உமா மற்றும் மண்டல அதிகாரிகள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் விடைத்தாள் திருத்திய 7 ஆசிரியர்கள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



இந்நிலையில், லஞ்சம் பெற்றுக் கொண்டு கூடுதல் மார்க் வழங்கிய விவகாரம் தொடர்பாக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணமானதால் அவரை இடைநீக்கம் செய்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகம் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணம் ஆகியுள்ளது. அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #AnnaUniversity
Tags:    

Similar News