செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே மணல் கடத்திய 2 வாலிபர்கள் கைது

Published On 2018-07-30 09:38 GMT   |   Update On 2018-07-30 09:38 GMT
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே மணல் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில், மொவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கொள்ளை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் மொவூர் பகுதிக்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முட்டம் மணல் சேமிப்பு கிடங்கில் இருந்து மணல் எடுத்து வருவதாக ரசீதை காட்டினர். அந்த ரசீதை போலீசார் வாங்கி பார்த்தனர். அப்போது அது போலியானது என்பதை கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மொவூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 28), ஓமாப்புலியூர் பகுதியை சேர்ந்த தீபக்கணேஷ் (25) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News