செய்திகள்

பைக் மீது அரசு பஸ் மோதல்- கணவன்-மனைவி, 2 குழந்தைகள் காயம்

Published On 2018-07-30 08:30 GMT   |   Update On 2018-07-30 08:30 GMT
பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கணவன்-மனைவி, 2 குழந்தைகள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை:

கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் இசக்கிராஜ் (வயது 34). இவரது மனைவி வள்ளியம்மாள் என்ற சுசிலா (30). இவர்களுக்கு ஹர்ஷினி (8), விக்னேஷ்வரன் (3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று கணவன், மனைவி, குழந்தைகள் ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிளில் சிங்கை, அடையகருங்குளம் விலக்கு அருகே சென்று கொண்டு இருந்தனர். 

அப்போது நெல்லையில் இருந்து பாபநாசத்தை நோக்கி சென்ற அரசு பஸ் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இசக்கிராஜ், சுசிலா, ஹர்ஷினி, விக்னேஷ்வரன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து சிங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News