செய்திகள்

சிதம்பரத்தில் இரவு பணியில் இருந்த நர்சிடம் டாக்டர் சில்மி‌ஷம்

Published On 2018-07-30 13:05 IST   |   Update On 2018-07-30 13:05:00 IST
சிதம்பரத்தில் இரவு பணியில் இருந்த நர்சிடம் டாக்டர் ஒருவர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழக ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் படிக்கும் மாணவர்கள் பயிற்சி டாக்டர்களாகவும் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த ஒரு பயிற்சி நர்சிடம், பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் ரீதியாக சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பயிற்சி நர்சின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு அந்த பயிற்சி டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து வேகமாக அவர் காரில் தப்பிசெல்ல முயன்றார்.

இதில் ஆத்திரம் அடைந்த நர்சின் ஆதரவாளர்கள் கார் கண்ணாடியை உடைத்தனர். தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். இது குறித்து போலீசாரிடம் யாரும் புகார் தரவில்லை. எனவே போலீசார் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News