செய்திகள்

ஈரோட்டில் ஓடும் பஸ்சில் கண்டக்டரிடம் செல்போன் பறித்தவர் கைது

Published On 2018-07-29 17:01 IST   |   Update On 2018-07-29 17:01:00 IST
தனியார் பஸ் கண்டக்டரிடம் செல்போன் பறித்தவரை போலீசார் கைது செய்து திருடப்பட்ட செல்போன் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு கஸ்பா பேட்டை அசோகபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 37). தனியார் பஸ் கண்டக்டர்.

இவர் நேற்று ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு செல்லும் தனியார் பஸ்சில் ஏறினார். பஸ்சில் அவரது பின்னால் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். நாச்சியார் தெருவில் சென்று கொண்டிருந்தபோது பிரபாகரன் பின்னால் நின்ற அந்த வாலிபர் திடீரென பிரபாகரன் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு ஓடினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் திருடன்... திருடன்... என கத்தினார். அந்த வழியாக வந்த பொதுமக்கள் செல்போனை பறித்து சென்ற வாலிபரை மடக்கி பிடித்தனர்.

இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை விசாரணைக்காக ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில் அந்த வாலிபர் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பிரபு (28) என்பதும் பெயிண்டராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து திருடப்பட்ட செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News