செய்திகள்

மாநில இளையோர் கிரிக்கெட் - ஈரோடு மாவட்ட வீரர்கள் தேர்வு

Published On 2018-07-27 16:41 IST   |   Update On 2018-07-27 16:41:00 IST
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் இன்று (வெள்ளிகிழமை) முதல் 29 வரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. #Statejuniorcricket

மொடக்குறிச்சி:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் இன்று (வெள்ளிகிழமை) முதல் 29 வரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

திருவாரூர் மாவட்டதில் நடைபெறும் முதல் சுற்று லீக் போட்டியில் ஈரோடு மாவட்ட இளையோர் 14 வயதுக்குட்பட்டோர் அணி வீரர்கள், நாமக்கல் திருவாரூர் மற்றும் வேலூர் மாவட்ட அணிகளுடன் விளையாட உள்ளனர். இதற்கான ஈரோடு மாவட்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.அபிஷேக் அணித்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் மேலும் எஸ் தரணீதர், கே.ராகுல், பி.ராகுல், எம்.ஹரிஸ் மணிகண்டன், ஏ.அபிஜித், எம்.ஹரிஹரன், எம்.நித்தின், ஜெ.அஸ்வத், ஜெ.ஸ்வனித், கி.மோகனரமேஷ் முகமது ரபான், எம்.பிரனேஷ்குமரன், டி.கே.சோமேஸ் கந்தன் கீதாஞ்சலி ஆகியோரும் அணி பயிற்சியாளராக வி.மோகன்ராஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகவலை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜாபர்ஆசிக்அலி தெரிவித்துள்ளார். #Statejuniorcricket

Tags:    

Similar News